Monday, May 30, 2016

வரி

வரி எழுதுவோருக்கு விதித்தால் வரி
காணாமல் போயி விடும் கவிஞரின் முகவரி.

அச்சில் வரவில்லை அய்யா என் வரி
அய்யய்யோ விதிக்க வேண்டாம் வரி.

வரிகளை கணக்கிட்டு விதித்தால் வரி
வரிப்பவரு கல்லவா விதிக்க வேண்டும் வரி.

வன்முறையின் வரையறை மீறாத வரை வரி
வன்மையாக கண்டிக்கத வரை வரி
வஞ்சனை செய்யாத வரி,
வஞ்சகப் புகழ்ச்சி இல்லாத வரி.

வரிசையாகக் கை கட்டி நிற்கும் வார்த்தைகள் என் வரியில்,
சீர் வரிசையாக அள்ளி தருவேன் நான் கவிதையை என் விருந்தினருக்கு.
வரிசையாக எத்தனை வரி எடுத்துரைத்தாலும்,
வரி பதிப்பகங்கள் தேடி வருவதில்லையே என் முகவரி?



No comments:

Post a Comment