Friday, May 6, 2016

தவப்பலன்

காலம் நெய்த நூல்,
காலத்தினால் அழியாத நூல்.
ஆயிரங்காலத்து பயிர்,
அவளே என் உயிர்.

தோழமைக்கு ஒரு தோள்,
தோல்விக்கு மறு தோள்,
வெற்றிக்கு பாராட்டு
வெறும் கையினால் முதுகில் ஷொட்டு.

என் இன்பம் தன் இன்பமென
என் துன்பம் தன் துன்பமென,
எண்ணிய மங்கை இவள்,

(எனது ) எத்தனை ஜென்ம தவப்பலனோ?

No comments:

Post a Comment