Saturday, May 14, 2016

பொங்கல்

கரும்போடும் கனிவோடும் வந்தது பொங்கல்,
கண்முன் நிறுத்தியது பல வண்ணங்கள்.
கவிதைகள் பொங்கின என்னுள் பொங்கலோ பொங்கல்
களைப்பின்றி எழுதிடுவேன் நான் இந்த திங்கள்.

காலையில் கண்டேன் ஏழையின் ஒளிமய கண்கள்,
கசக்கி பிழிந்து அவன் கட்டிய கந்தல்,
கலங்கிய என் மனம் பட்டது பல துன்பங்கள்,
கண்ணா! இன்னும் இருக்கிறார்கள் பல த்ரௌபதிகள்.

காசையும் பதவியும் அனுபவிக்கும் கட்சி மாறிகள்,
கடினங்களும் கண்ணீரையும் காண மாட்டார்கள்.
கடவுளே யன்றி வேறு எவர்கள் எங்கள் துணை வருவார்கள்?




No comments:

Post a Comment