Saturday, April 30, 2016

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

அகவலை படித்தேன்,
அகத்தினுள் மகிழ்ந்தேன்.

அல்லல்கள் ஓடிட கண்டேன்,
அல்ல இது உண்மை என்பவரும் நம்பிட கண்டேன்.

அகிலமெல்லாம் உன்னுடன் துவங்கும்,
அகலமான பாதைக்கு உன் துதி வழி காட்டும்.

அம்பிகை மைந்தா,
அருட்கை வேந்தா.

அன்றாட நானுனை பாட,
அருள் புரிந்த நீ கண்ணுக்கு விருந்தா, செவிக்கு விருந்தா?
உள்ளத்தின் மருந்தா?