Monday, May 16, 2016

சொக்கலிங்கா

சொல் செயல் திறனெல்லாம் உனக்கு அடிமை,
சொக்கிப் போயி நிற்க வைப்பதோ உன் கடமை.

செருக்குடன் உன்னை தொழுவோரின் மடமை,
செதுக்கி வைப்பதோ உனது இயல்புடமை.

சென்ற இடம் எல்லாம் உன்  மகிமை ,
செப்பிட முடியாது  உன் பெருமை,
செவிகள் போதாத எங்கள் நிலைமை,
செழுமை நடுவில் காணும் போதாமை.

செம்மையான வளர்ச்சிக்கு நீ தாங்கும் தலைமை,
செவ்வனே நீக்கி விடும் எமது அறியாமை,
சொற்றொடர்களில் எனக்கு நீ தந்த வலிமை
சொல்லுக்கடங்க வில்லை இந்த சனிக்கிழமை.

No comments:

Post a Comment