Friday, May 13, 2016

Looks like 1 poem got left out for the count of 14 poems in 14 days in May so far. Hence adding this poem today. Enjoy.


ஏக்கம்

ஏக்கத்தில் நீ தவிக்க,
எதிர்நோக்கி நா தழு தழுக்க,
எங்கிருந்தோ நான் வந்து
எட்டியுனை கட்டியணைக்க.

எஞ்சியதை நீ முடிக்க
எரிமலையாய் காதல் வெடிக்க
எவ்வண்ணம் எடுத்துரைக்க
என்னவளே உன் பேரழகு?

எண்ணமெல்லாம் நீ
என்னுயிரும் நீ
எந்த திசையிலும் நீ
எனை ஆட்கொண்ட தீ.

எப்படியணைப்பேன் உன்னை?
எப்படி அடைவேன் குளிர்ச்சி, கிளர்ச்சி, மகிழ்ச்சி, மறுமலர்ச்சி?
எடுதுரைப்பாய் எள்ளளவேனும்.

No comments:

Post a Comment