Thursday, May 19, 2016

கந்தன் கருணை

வேல் உண்டு வினையில்லை,
மயில் உண்டு பயமில்லை.
குகன் உண்டு குறையில்லை,
காப்பது உண்டு காக்க வைபதில்லை.

குமரனின் காலடியில் விரிந்த சோலை,
கிரோம்பேட்டை எனும் இந்த பூஞ்சோலை
குதூகலிக்கும் குடும்பங்களின் குவளை
குன்றாத, குறையில்லாத இன்பக்குவியலை.

கவிதையில் இருக்கிறதோ இல்லையோ எதுகை மோனை,
கண்டிப்பாக உண்டு கந்தன் கருணை.
கந்தனுக்கு இருபுறம் வள்ளி தேவயானை
கவின்ஞனுக்கு இருபுறம் கற்பினை கற்பனை.

No comments:

Post a Comment