Friday, May 27, 2016

பழ வியாபாரி

எங்கே அந்த வாழைபழம் விற்கும் வியாபாரி?
என் பழங்கள் மட்டும் விற்று போவதில்லையே என வைப்பானே ஒப்பாரி.

ஏறி விடும் பழ விலைகள் எட்ட முடியாத அம்பாரி,
என்னும் பழம் வாங்குபவர்கள் இவனிடம் மட்டும் வள்ளல் பாரி.

எல்லோரிடமும் கூவிக் கூவி விற்கும் இவனுக்கு இல்லையா கேளிக்கை வரி?
என்றும் ஓரிடம் என்று தங்காத இவனுக்கு எது முகவரி?

என்றுமே தங்கி விடவில்லை பழங்கள் இவனிடம் நாரி,
எல்லா பழங்களும் விற்றிருக்கிறார்கள், விற்காதது நன்னாரி.

என்றோ ஒரு முறை "பந்த்" வந்தால் விழும் கல்வீச்சு மாறி மாறி,
எட்டி உதைப்பார்கள் இவன் வயிற்றில் சரமாரி.

No comments:

Post a Comment