Tuesday, May 10, 2016

ஆத்மா

பிரிவில் தான் சுகமா?
பிரிந்து இணைவதிலா?
பிரிவிற்கும் உறவிற்கும் என்ன உறவு?
சரிவு காணா உறவுகளில் இன்பம் திகட்டிடுமா?

பிரிவிற்கு எங்குமா?
பிரிந்து, சரிந்து, இனைந்து, மகிழ்வது தான் இன்பமா?

இலக்கை அடையும் வரை தான் ஏக்கமா?
இலக்கை அடைந்த பின் தூக்கமா?
புதிய இலக்கை  நோக்கி பயணமா?
புதுமை பித்தன் தான் மனிந்தனின் புனர் ஜென்மமா?

பழையன கழிதலும் புதுவன புகுதலும் தான் வாழ்கையின் வழிமுறையா?
புதுசும் பழசாகி விடும் என்றரிந்துமா?
போலி வாழ்கையின் புதுப்புது அர்த்தங்கள் எவை?
பொலிவூட்டும் " ஆனந்த வாழ்கை" தேடும் ஆத்மாவை.

No comments:

Post a Comment