Thursday, May 12, 2016

வயோதிகர்

இவர்களா வயதானவர்கள்?
இல்லை வருங்காலத்தில் என் பிரதிபலிப்புகள்.

வதந்திகளும் வெட்டி பேச்சும் மட்டுமல்ல,
வேதாந்தமும் வேதனைகளும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது இங்கு.

சிலர் தலையில் நரை, சிலர் தலையில் குறை.
சிலர் நடந்து செல்வது பாதம் இழுக்கும் வரை.

இவர்கள் அனுபவம் நமக்கு தேவை.
இவர்கள் நம் இளமைக்கு கொடுப்பார் சலவை.

நாமெல்லாம் நாடினால் இவர்களின் நலம்,
நாட்டில் தேவைப்படாது முதியோர் இல்லம்.

அணையும் தீபம் சுடர் விட்டு எரியும்.
அணையாது பாவம் அன்பு இவரது யாருக்கு புரியும்? 

No comments:

Post a Comment