Monday, May 9, 2016

அம்மா

அன்று எனை நடக்க வைத்தது நல்வழி,
அதனால் தான் நான் இன்று இல்லை ஏமாற்று பேர்வழி,

அனைவரின் பாராட்டுகளுக்கு அவள் தான் காரணம்,
அதனால் தான் மேலும் நலமடைகிறது என் குணம்.

அந்தி சாயும் வேளை எனை எதிர்பார்த்து,
அகத்தினுள் அவஸ்தை பட்டு,
அப்பாவி அவன், ஐயோ என்னாயிற்றோ என்று வேதனைப்பட்டு,
அப்போது திரும்பிய என்னை கவலையும்,
அன்பு கலக்க உள்ளே அழைத்து,
அன்று முதல் இன்று வரை என்றும்
அற்புதக் காட்சி யாக என் இதயத்துள் அச்சடிக்க பட்டிருக்கு.

No comments:

Post a Comment