Sunday, May 8, 2016

சகுனம்

எனை பெற்ற என் அம்மா சகுனம் பார்ப்பதில்லை,
என்னை தான் பூனையாய் மடியில் கட்டி இருக்காளே ?

அன்று பிரசவிக்க ஆஸ்பத்திரி சென்ற போது கருப்பு பூனை குருக்கிட்டதே,
அதை இன்னமும் தேடி திரிகிறேன், திரும்ப இப்படி குறுக்கே போகாத என?

என் எதிர்பார்ப்புகள் எல்லாம் " உடனடி",
என்னை பொறுத்த வரை நான் எப்போதுமே " ரெடி".

அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிறு தொட்டு பார்க்கும் " டைப்" நான்,
அனைத்திற்கும் சகுனம் பார்ப்பவன் நான்.

சகுனி சகுனம் பார்த்தா பகடை காய் உருட்டினான்?
சகுனதிளிருந்து நற்குணம் மாறிய வரை எங்கு காண்?

No comments:

Post a Comment