Monday, May 30, 2016

முயற்சி

இது ஒரு தனி மனிதனின் தணியாத தாகம்.
இது ஒரு கர்மயோகியின் காலை நேர யாகம்.

இன்றாவது அடிக்குமா எனக்கு யோகம்?
இன்று மட்டும் என்ன பிரத்தியேகம்?

இனி வரப்போவது செல்வம் எனக் கரைவது காகம்,
இப்பொழுதெல்லாம் காதில் கேட்பது வசந்த ராகம்.

இன்றைய உலகில் வாய்ப்புகள் அமோகம்,
இன்னமும் வாழ்வின் மேல் வரவில்லையா மோகம்?

இதோ கண்டேன் புன்னகை, மறைந்தது சோகம்
இல்லையா சாதிக்க வேண்டும் என்ற வேகம்?

இங்கு வென்றோர், தோற்றவர் என இரண்டே வர்க்கம்,
இல்லை முயற்சி எடுத்தவர்கள் என்ற மூன்றாவது ரகம்.

No comments:

Post a Comment