Tuesday, May 3, 2016

நாய்க்குட்டி

மழையில் நனைந்த நாய்க்குட்டி,
மல்லாந்து படுப்பது வெகு சுட்டி.

மலரென நனைந்தாயோ?
மழலை பேச நினைத்தாயோ?

மானிடர்களை கண்டு ஒளிந்தாயே,
மனமில்லாதவர்களா நாங்கள்?

மலங்க மலங்க முழிதாயே,
மழையில் காணவில்லையா உன் தாயை?

"மார்னிங்" வேளைக்கு நீ ஒரு ஊக்கம்,
மலர்ந்த மொட்டாய் அளித்தாய் மயக்கம்.

No comments:

Post a Comment