Wednesday, May 11, 2016

காலை - நல்ல வேளை

காலையில் கதிரவன் தோற்றம்,
கற்பூரம் ஏற்றப்பட்ட வானம்.
கலைமகள் அறிவு புகட்டும் நேரம்,
கற்பனை பல உதித்திட அஸ்திவாரம்.

காத்திருந்த கண்களும்,
கவிப்பாடத் துடிக்கும் நாவும்,
கதிரவனின் வருகையோடு எழும்.
கம்ப ராமாயணம் பல எழுதும்.

களிப்பாகத் தொடங்கிய கவிதை நடை,
களைப்பாறும் முன்பே அதன் இடை,
கரங்களில் பட்டு காணும் விடை
கட்டித் தங்க மதற்கு என்ன எடை?

காலையில் உதித்து, மாலையில் மறித்து,
காண்போர்க் கெல்லாம் பாடம் கற்பித்து,
கதிரவன் ஆற்றிடும் இந்த அறியத் தொண்டு,
கல்வி போதிப்பவரிடமும் காண்பது உண்டு.

No comments:

Post a Comment