Monday, May 30, 2016

பூகம்பம்

வரலாறு காணா பூகம்பம்,
வரலாற்றின் முடிவிற்கு ஆரம்பம்?

வயிற்று பசிக்கு உனக்கு தேவையா உயிர்கள் ஓர் லட்சம் ?
வலப்பக்கம், இடப்பக்கம் எங்கு நோக்கினும் ஒரே அச்சம்.

வளைகுடா கச் பகுதியில் எந்தே உன் ஆக்ரோஷம்?
வரிந்து கட்டிக்கொண்டு கொடுத்தாயே பலருக்கு மோட்சம்.

வற்றியது எங்கள் கண்களா?
வரண்டது எங்கள் நாக்குகளா?
வலியின் வலிமை கண்டோமடா சாமி,
வழிந்தோடி வரும் கண்ணீரைத் தடுக்க வழியைக் காமி.

வசூல் கூட்டுவோம்,
வாரி வாரி வழங்கிடுவோம்,
வாழ்வளிப்போம்,
வழமையை நிலை நாட்டுவோம்.


No comments:

Post a Comment