Sunday, June 19, 2022

 இறுதி ஊர்வலம்


 அந்த கடைசி அறையில் இன்று அமைதியான இறுதி ஊர்வலம்,

அங்கு  பூரானை எறும்புகள் தூக்கி சென்றன நகர்வலம்.


இன்று ராகு காலத்தில் அதற்கு என் கையில் சாவு,

இல்லை என்றால் என்னை குடுக்க வேண்டி இருக்கும் காவு.


கழிவறையில் மழைக்காக ஒதுங்கி இருக்கும் போல,

கழிசடை என திட்டினேன் , நிம்மதியாக கழிக்க முடியாததால.


மோரிக்குள்ளே இருந்து எட்டி பார்த்ததின் பலன்,

மோக்ஷம் கிடைக்கும் என இருந்ததோ இன்று அதன் ராசி பலன்.


புதைப்பேளா? எரிப்பேளா? எனக் கேட்க தோன்றியது எறும்புகளை,

பிழைத்து போகட்டும் என விட்டிருக்க வேண்டியது தானே அவளை.


ஒதுக்கவும் முடியலை, ஒதுங்கி போகவும் முடியலை என்றேன்.

ஒர வஞ்சனை செய்து ஒரு நமுட்டு சிரிப்பு வேற மூஞ்சிக்கு என்ன செய்வேன் ?



No comments:

Post a Comment